உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிடப்பில் வடிகால் துார் வாரும் பணி  ஆவடிக்கு வெள்ள பாதிப்பு அபாயம்

கிடப்பில் வடிகால் துார் வாரும் பணி  ஆவடிக்கு வெள்ள பாதிப்பு அபாயம்

ஆவடி, கடந்தாண்டு பருவ மழையின்போது, ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், அண்ணனுார், பருத்திப்பட்டு உள்ளிட்ட 32 பகுதிகளில் உள்ள 3,227 வீடுகளில், வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது. இதில், அவர்களது இயல்பு வாழ்க்கை முடங்கியது.பாதிக்கப்பட்ட 2,000 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, மழைக்கால பாதிப்பை தடுக்க வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில பேரிடர் வெள்ளத்தடுப்பு நிதி வாயிலாக 30.61 கோடி ரூபாய் மதிப்பில், 10 இடங்களில் 9.45 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேநேரம், வார்டுகளில் உள்ள வடிகால்கள் துார் வாரும் பணி, இன்னும் துவக்கப்படவில்லை.இது குறித்து, ஆவடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது:வடிகாலை துார் வார வேண்டும் என, கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 48 வார்டுகளிலும், இதுவரை துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 40 அடி கால்வாயிலும், துார் வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை. இதனால், ஆவடி மாநகராட்சி பகுதிகள், இந்த ஆண்டும் வெள்ள பாதிப்பில் சிக்கும் நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மழைக்கு ஒரு கமிஷனர்

ஆவடி மாநகராட்சியில், கடந்த மூன்றாண்டுகளாக ஒவ்வொரு பருவமழை காலத்திலும் மாநகராட்சி கமிஷனர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். இதனால், ஆவடி மாநகராட்சியின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டு, நலத்திட்ட பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன. எனவே, தமிழக அரசு மழைக்கு மழை கமிஷனர்களை மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

கவனிக்கப்படுமா?

மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட விஜயலட்சுமி நகர் 6வது தெரு சந்திப்பில், வினை தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. தனியார் பராமரிப்பில் உள்ள இக்கோவில் அருகே உள்ள குளம் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், குளத்திற்கு மழைநீர் வந்து சேரும் வகையில் வடிகால் பணிகள்நடந்தன. 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடைசி கட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், குளத்தை சுற்றிலும் புதர்கள் மண்டியுள்ளன. மழைக்காலம் துவங்கும் முன், மீதமுள்ள பணிகள் முடித்து, குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ