தெப்பத்தில் அருள்பாலித்த மாங்காடு காமாட்சி
மாங்காடு, குன்றத்துார் அருகே மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடந்தது. அதில், தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காமாட்சி அம்மன்.இந்த ஆண்டு தெப்பத் திருவிழா, நேற்று துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மாலை 6:30 மணிக்கு வெள்ளீஸ்வரரும், 7:30 மணிக்கு காமாட்சி அம்மனும் எழுந்தருளி, குளத்தை சுற்றி வலம் வந்தனர்.தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு, சிம்ம வாகனத்தில் காமாட்சியம்மன் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.