வழிப்பறி திருடன் கைது
சோமங்கலம்: புதுநல்லுாரில், கடந்த 28ம் தேதி வாலிபர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகையை வழிப்பறி செய்த, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த கறி செல்வம், 27, என்ற ரவுடியை, சோமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சோமங்கலம் அருகே புதுநல்லுாரில் பதுங்கியிருந்த கறி செல்வத்தை, நேற்று பறிமுதல் செய்தனர்.