உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடுக்குமாடி ஷிலாப்பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு

அடுக்குமாடி ஷிலாப்பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு

சேலையூர் :தாம்பரம் அருகே மூன்று நாட்களாக, அடுக்குமாடி குடியிருப்பு 'ஷிலாப்'பில் சிக்கி தவித்த பூனையை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.தாம்பரம் மாநகராட்சி, சேலையூர், பாரதி நகர், பஜனை கோவில் தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.அந்த குடியிருப்பின் பின்புறம் உள்ள, 'ஷிலாப்'பில், பூனை ஒன்று இறங்கி, அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.இதை கவனித்த குடியிருப்புவாசிகள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம், தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி, அந்த பூனையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ