மத்திய சென்னை - சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மக்கள்
பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருவதை வாரியத்தினர் சீரமைக்காததால் ராயப்பேட்டை, ஒயிட்ஸ் லேன் குடியிருப்புவாசிகள், சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகின்றனர்.இரு தினங்களுக்கு முன் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அப்பகுதிமக்கள் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சீரமைப்பதுடன், தேங்கிய கழிவுநீரை அகற்றி, அவ்விடத்தில் பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். ராம் பிரசாத், ராயப்பேட்டை.