உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை கலெக்டரின் வங்கி கணக்கில்... துணிகர மோசடி! ரூ.12 லட்சம் சுருட்டிய அதிகாரிகள் கைது

சென்னை கலெக்டரின் வங்கி கணக்கில்... துணிகர மோசடி! ரூ.12 லட்சம் சுருட்டிய அதிகாரிகள் கைது

அரசின் சார்பில் துவங்கப்பட்ட சென்னை கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து, அவரை போல காசோலையில் போலியாக கையெழுத்திட்டு, 11.63 லட்சம் ரூபாய் கையாடல் செய்த, இரு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் சென்னை கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், அங்கு பணியின் போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, அரசின் சார்பில் என்.ஆர்.ஐ., நிதியுதவி என்ற வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் சார்பில் சேர்க்கப்படும் நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் சார்பில், சென்னை கலெக்டர் பெயரில், என்.ஆர்.ஐ., நிதியுதவி வங்கி கணக்கு துவக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

போலி கையெழுத்து

இந்த வங்கி கணக்கில் இருந்து, பல தவணைகளில், 11.63 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை, 2022 - 2023ல் தினேஷ் என்ற பயனாளிக்கு வழங்கப்பட்டது போல, ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், அதில் கலெக்டரின் கையெழுத்து இல்லை. இதனால், கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கலெக்டர் தான் காசோலையில் கையெழுத்திட்டு, பணத்தை எடுத்துள்ளார்' என, தெரிவித்தனர். இது, கலெக்டரையும் குழப்பமடைய வைத்தது. பணம் மாயமானது தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக என்.ஆர்.ஐ., பிரிவு அதிகாரிகள், தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல அமைதி காத்தனர். துணை கலெக்டர் ஹர்ஷத் பேகம், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, உதவி கமிஷனர் ராஜசேகரன் விசாரணை நடத்தினார். கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடம், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. மோசடிக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் ராஜா தலைமையிலான போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தற்போது ஆர்.ஐ., எனப்படும் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரமோத், 30, என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அரசு முத்திரை

அவர் அளித்த தகவலின்படி, ஏற்கனவே சென்னை கலெக்டர் அலுவலகத்தில் என்.ஆர்.ஐ., பிரிவில் பணிபுரிந்து, தற்போது மாம்பலம் தாசில்தார் அலுவலகத்தில், ஆர்.ஐ.,யாக பணிபுரியும் சுப்பிரமணி, 31, என்பவரை பிடித்து விசாரித்தனர்.அப்போது, இருவரும் சேர்ந்து, பிரமோத்தின் நண்பரான திருவள்ளூர் பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த, கார் டிரைவர் தினேஷ், 30, என்பவரை பயனாளியாக காட்டி, பணம் எடுத்ததை ஒப்புக் கொண்டனர். இதற்காக, கலெக்டரின் பெயரில் போலி முத்திரைகள் தயாரித்தும், காசோலையில் அவரை போல கையெழுத்திட்டும் மோசடி செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.இதையடுத்து, பிரமோத், சுப்பிரமணி, தினேஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து, மோசடி பணத்தில் வாங்கப்பட்ட, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள், 1 சவரன் தங்க நகை, 80,000 ரூபாய் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அரசு முத்திரை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Narasimhan
ஏப் 05, 2025 22:58

அதிகாரிகள் போலவா உள்ளனர் இந்த மொகரக்கட்டைகள்?


Barakat Ali
ஏப் 05, 2025 22:18

கலெக்டரிடம் அவ்வளவு பணமா ???? சுய சம்பாத்தியமா அல்லது ......


Perumal Pillai
ஏப் 05, 2025 20:06

உண்மையான திராவிடர்கள் .


Rasheel
ஏப் 05, 2025 16:21

முகத்தை பார்த்தால் அரசு ஊழியரா என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை??


m.arunachalam
ஏப் 05, 2025 15:38

இட ஒதுக்கீட்டை 95 சதவீதமாக்கினால் இதுபோன்ற வல்லுனர்களையும் ,நிபுணர்களையும் உருவாக்கலாம் .


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 05, 2025 12:26

இவர்கள் அரசு ஊழியர்கள். இவர்களுக்கு சம்பளம், பஞ்சப்படி, சம்பள உயர்வு, பென்ஷன், வாரிசு வேலை, மேலும் தொட்டதுக்கெல்லாம் லஞ்சம், இப்போது அரசாங்க பணத்தையே ஆட்டயப்போடும் அவலம். இவர்கள்தான் வருவாய் ஆய்வாளர்கள். எங்கு தங்களுக்கு காசு கிடைக்கும், யாரிடம் ஆட்டையை போடலாம் என்பதே இவர்களின் தொழில். மூஞ்சியை பார்த்தாலே திராவிட குஞ்சுகளின் நசுக்கிட்டான், பிதுக்கிட்டான், அடங்கு, அத்துமீறி களை பொங்கி வழிகிறது.


VENKATASUBRAMANIAN
ஏப் 05, 2025 08:10

இதுபோன்ற ஆட்களை காசு வாங்கி கொண்டு வேலையில் அமர்த்தினால் இப்படித்தான் நடக்கும். இதுதான் திராவிட மாடல்


Kalyanaraman
ஏப் 05, 2025 07:33

தூறை ரீதியான நடவடிக்கை என்று இட மாற்றம் செய்வார்கள். அவ்வளவுதான் தண்டனை. குற்றம் செய்பவர்களுக்கு குஷி ஏற்படுத்தும் வகையில் தான் நமது நாட்டு சட்ட நடவடிக்கைகள் இருக்கிறது. அதுவும் அரசு ஊழியர்கள் என்றால் ஸ்பெஷல் - குஷியோ குஷி.


தமிழன்
ஏப் 05, 2025 01:38

ஒருத்தனை பார்த்தால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் மாதிரியும் மற்றொருவன் ஏதோ என்கவுண்டரில் கண்ணில் குண்டடி பட்டு தப்பித்த ரவுடி மாதிரியும் மற்றொருவன் ராப்பிச்சை மாதிரியும் இருக்கிறானுகள் இவனுகள் ஆபீசர்களா??


sivaraman visvanathan
ஏப் 05, 2025 07:26

அருமையான கருத்து தமிழன் அவர்களே மூஞ்சியும் முகரக்கட்டையும். சிரித்துவிட்டேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை