உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கல்லுாரி பஸ் ஓட்டுநர் சாலை விபத்தில் பலி

 கல்லுாரி பஸ் ஓட்டுநர் சாலை விபத்தில் பலி

குன்றத்துார்: திருப்போரூர், மேற்கு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு, 54. கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுநர். கோயம்பேடில் இருந்து கல்லுாரி பேருந்து இயக்க, நேற்று அதிகாலை தன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் புறப்பட்டார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், குன்றத்துார் அருகே பரணிபுத்துார் பகுதியை கடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே டில்லிபாபு பலியானார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை