மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயின்டர் பலி
21-Dec-2025
குன்றத்துார்: திருப்போரூர், மேற்கு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு, 54. கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுநர். கோயம்பேடில் இருந்து கல்லுாரி பேருந்து இயக்க, நேற்று அதிகாலை தன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் புறப்பட்டார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், குன்றத்துார் அருகே பரணிபுத்துார் பகுதியை கடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே டில்லிபாபு பலியானார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
21-Dec-2025