பொன்னேரியில் லாரி மோதி கல்லுாரி மாணவி பலி
பொன்னேரி, பொன்னேரி, அன்னை அவென்யூ பகுதியைச் சேர்ந்த குமார், 48, என்பவரது மகள் ஜோஷிதா, 24; எம்.டெக்., படித்து வந்தார்.நேற்று மாலை, வீட்டில் இருந்து பொன்னேரி பஜார் பகுதிக்கு சென்று, தலைக்கவசம் அணியாமல்,'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், பொன்னேரி - செங்குன்றம் சாலை வழியாக வீடு திரும்பினார்.பொன்னேரி, மூகாம்பிகை நகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று ஜோஷிதாவின் ஸ்கூட்டர் மீது மோதியது.இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலின்படி, பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பிடித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.