சென்னை: புகார் பெட்டி - கழிவுநீர் பொங்குவதால் தொற்று பாதிப்பு அச்சம்
அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர் 9வது பிரதான சாலை மற்றும் டான்சி நகர் 4வது தெரு ஆகியவை, அடுத்தடுத்து தெருக்களாக உள்ளன. இங்கு, 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில், பல மாதங்களாக இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி நிற்கிறது.இதனால், துர்நாற்றம் வீசி, முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது. புகார் அளித்தால், பெயரளவுக்கு அடைப்பை அகற்றுகின்றனர். அன்று இரவே மீண்டும், கழிவுநீர் வெளியேறுகிறது. தெருக்களில் உள்ள குழாய்களை முழு ஆய்வு செய்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நிரந்த தீர்வு காண வேண்டும்.- மணி, டான்சிநகர், வேளச்சேரி