புகார் பெட்டி:வேகத்தடையால் விபத்து: வெள்ளை கோடு தேவை
வேகத்தடையால் விபத்து: வெள்ளை கோடு தேவை
சென்னை- -- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பூந்தமல்லி அருகே, செம்பரம்பாக்கம் பகுதியில் இந்த சாலையை ஓட்டியுள்ள சர்வீஸ் சாலையில் வேகத்தடை உள்ளது. வேகத்தடைஉள்ளதை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் அதன்மீது வெள்ளைக்கோடுகள் இல்லை. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இங்குள்ள வேகத்தடை மீது வெள்ளை கோடுகள் வரைய வேண்டும்.- - என்.தினேஷ், செம்பரம்பாக்கம்.