வடபழனி பேருந்து நிறுத்தத்தில் குவிக்கப்பட்டுள்ள கட்டட கழிவு
வடபழனி,வடபழனியில் பேருந்து நிறுத்தத்தில் குவிக்கப்பட்டுள்ள கட்ட கழிவுகளால் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். வடபழனி 100 அடி சாலையில், அசோக் நகர் செல்லும் பகுதியில், மேம்பாலம் இறங்கும் இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அசோக் நகர், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுகின்றன. இப்பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இருக்கை அருகே கட்டட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் இருக்கையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கட்டட கழிவில் இருந்து பறக்கும் துாசியால் பயணியர் மற்றும் பாதசாரிகள் அவதிப் படுகின்றனர்.