நேபாள நபர் மர்ம மரணம்
திருவேற்காடு: நேபாள நாட்டைச் சேர்ந்த கேன்பகதுார், 45, சென்னை முகப்பேரில் உள்ள அவரது தங்கை அஸ்மிதா, 35, வீட்டிற்கு வந்தார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடைபயிற்சி செல்வதாக கூறி சென்றவர், திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் காயங்கள் இருப்பதால், தவறி விழுந்து இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என, திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.