உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நேபாள நபர் மர்ம மரணம்

நேபாள நபர் மர்ம மரணம்

திருவேற்காடு: நேபாள நாட்டைச் சேர்ந்த கேன்பகதுார், 45, சென்னை முகப்பேரில் உள்ள அவரது தங்கை அஸ்மிதா, 35, வீட்டிற்கு வந்தார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடைபயிற்சி செல்வதாக கூறி சென்றவர், திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் காயங்கள் இருப்பதால், தவறி விழுந்து இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என, திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !