கண்காட்சிக்கு குவிந்தோரால் நெரிசல்
சென்னை:தோட்டக்கலைத்துறை வாயிலாக தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில், நான்காவது மலர் கண்காட்சி நடக்கிறது. இதற்காக, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. விடுமுறை நாளான நேற்று, மலர் கண்காட்சியை 14,480 பேர் கண்டு ரசித்தனர்.மலர் கண்காட்சியில் திரண்டவர்களால், பூங்கா அமைந்துள்ள கதீட்ரல் சாலை, அண்ணாசாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.அதேபோல், அண்ணா சாலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு திரண்ட புத்தக பிரியர்களால், அண்ணா சாலையில் சைதாப்பேட்டை வரை கடும் நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலையில் பல கி.மீ., வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.