சித்தியின் கள்ளக்காதலனை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு
ஆவடி, ஆவடி அடுத்த பொத்துாரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், இரவது மனைவி கற்பகம், 30. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரிகிருஷ்ணன், 29, என்பவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம், ஹரிகிருஷ்ணன் கற்பகத்தை போனில் அழைத்தபோது, அவர் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், கற்பகத்தின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். தகவலறிந்த கற்பகத்தின் அக்கா சத்யா, அவரது மகன் பெஞ்சமினுடன் ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹரிகிருஷ்ணனின் அண்ணன் ஜீவா பிரபு, பெஞ்சமினை பிடித்து கொள்ள, வீட்டில் இருந்த சிறிய வெட்டு கத்தியால் பெஞ்சமின் தலையில் ஹரிகிருஷ்ணன் வெட்டியுள்ளார். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெஞ்சமினுக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார்