லாட்ஜில் முதியவரை தாக்கி கவரிங் நகை, பணம் பறிப்பு
பூக்கடை, கன்னியாகுமரியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 60. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவர், தொழில் சம்பந்தமாக, நேற்று பூக்கடை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தபோது, அவரை பார்க்க, சுரேஷ்குமாருக்கு தெரிந்த நபரான பாலாஜி, அவரது நண்பர் ஒருவருடன் வந்துள்ளார்.அப்போது, சுரேஷ்குமாரிடம் அவர்கள் தகராறு செய்து, அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த கவரிங் நகைகள், 2,000 ரூபாய் பணம் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட திருவொற்றியூர், அம்பேத்கர் நகர், மேட்டுத் தெருவை சேர்ந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பாலாஜியை, 29, நேற்று கைது செய்தனர்.பாலாஜியுடன் சம்பவத்தில் ஈடுபட்ட, 17 வயது சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.