உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார், ராமாபுரம் அடுத்த பாலநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 65. இவர் நேற்று, செய்யூர் -- வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் உள்ள ராமாபுரத்தில், காலை 5:00 மணியளவில் டீ குடிக்க வந்துள்ளார். டீ குடித்து விட்டு, சாலையில் நடந்து சென்றபோது, அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத கார், இவர் மீது மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார். மேல்மருவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !