உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தையின் கொலுசு திருடிய மூதாட்டி கைது

குழந்தையின் கொலுசு திருடிய மூதாட்டி கைது

சென்னை, சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 45; அ.தி.மு.க., வட்டச் செயலர். இவர் கடந்த, 15ம் தேதி இரவு குடும்பத்துடன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது ஒன்பது மாத குழந்தையின் 2 சவரன் கொலுசை மர்மநபர் திருடிச் சென்றார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், கோட்டூர்புரம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலைவாணி, 60, என்பவர் திருடியது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை