உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்

செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்

சென்னை, பயணியர் வசதிக்காக, செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையொட்டி, செங்கல்பட்டு - திருநெல்வேலிக்கு வரும் 17 முதல் 26ம் தேதி வரை வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதனால், பயணியர் வந்து செல்ல வசதியாக, செங்கல்பட்டு - கடற்கரை இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு - கடற்கரைக்கு மதியம் 1:45, 2:20 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல், கடற்கரை - செங்கல்பட்டு பகல் 12:40, மதியம் 1:00 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆந்திராவின் சூலார்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், கேரளாவின் திருவனந்தபுரம் பணிமனையில், மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், அத்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:  சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 5:40, சூலுார்பேட்டை - நெல்லுார் காலை 7:50, நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:20, சூலுார்பேட்டை - சென்ட்ரல் பகல் 12:35, ஆவடி - சென்ட்ரல் காலை 4:25 மணி ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது. ஒரு பகுதி ரத்து  சென்ட்ரல் - சூலுார்பேட்டை அதிகாலை 4:15, 5:00 மணி ரயில்கள் எளாவூர் வரை மட்டுமே செல்லும்  சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 6:45 மணி ரயில் எளாவூரில் இருந்து இயக்கப்படும்  சூலுார்பேட்டை - கடற்கரை காலை 7:25 மணி ரயில், எளாவூரில் இருந்து இயக்கப்படும்  தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில் மேற்கண்ட நாட்களில், முண்டியம்பாக்கம் செல்லாமல் திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்.  விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும். இன்று 15, 18ம் தேதிகளில் இச்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  கேரள மாநிலம் குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி விரைவு ரயில், வரும் 17, 22, 24ம் தேதி களில், கோட்டயம் வழியாக மாற்றுப்பாதையில் செல்வதால், எர்ணாகுளம், ஆலப்புழா வழியாக செல்லாது  எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில், வரும் 30, நவ., 3ம் தேதிகளில், மாற்றுப்பாதையில் செல்வதால், 85 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்  எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில், வரும் நவ., 1ம் தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், 50 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !