உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 31ல் கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 31ல் கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 31ம் தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கும் முகாமில், 8ம் வகுப்பு முதல் அனைத்து கல்வி தகுதியுடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். முகாமில், எரிசக்தி துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, வேலைக்கான ஆட்களை தேர்வு செய்கின்றன. பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் விபரங்களை பதிவேற்றலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி