அகர்வாலில் சிறாருக்கு இலவச கண் பரிசோதனை
சென்னை, அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், வரும் 31ம் தேதி வரை, 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, இலவச கண் பரிசோதனை நடைபெற உள்ளது.உலக கண் பார்வை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு, இலவச கண் பரிசோதனை மற்றும் கண் கண்ணாடிகள், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டது.இதுகுறித்து, மருத்துவமனையின் பிராந்திய தலைவர் சவுந்தரி கூறியதாவது:இந்தியாவில், 15 வயதுக்கு உட்பட்ட, 1,000 சிறார்களில், ஒருவர் கண் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், கிட்டப் பார்வை என்ற மயோபியா, 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களில், 7.5 சதவீதம் பேருக்கு பாதிப்பு உள்ளது. உலகளவில் கண் பார்வை பாதிக்கப்பட்ட சிறார்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.எனவே, குழந்தைகளின் கண் பார்வை பாதிப்பை தடுக்கும் வகையில், அனைத்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையிலும், வரும் 31ம் தேதி வரை,18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இலவச கண் பரிசோதனைக்கு, 95949 24048 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.