உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு அலுவலகமா... கட்சி ஆபீசா...! ஆவடி மின்வாரியத்தில் அவலம்

அரசு அலுவலகமா... கட்சி ஆபீசா...! ஆவடி மின்வாரியத்தில் அவலம்

ஆவடி, ஆவடி மாநகராட்சியில், அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் தங்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்த சாலையின் முக்கிய பகுதிகளில் பேனர் வைத்து வருகின்றனர். அதிகாரிகள் அதை கண்டும் காணாமல் இருப்பதால், விதிமீறி வைக்கப்படும் பேனர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், ஆளுங்கட்சியினர் என்றால் விலக்கு அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அந்த வகையில், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஆவடி துணை மின் நிலையத்தில், அலுவலக சுற்றுச்சுவரில், ஆளுங்கட்சியினர் போட்டி போட்டு விளம்பர பேனர்களை ஒட்டியுள்ளனர். இதனால், 'அரசு அலுவலகமா அல்லது கட்சி அலுவலகமா...' என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், அங்கு ஒட்டியுள்ள பேனர்களை அகற்றி, மின் வாரியம் தொடர்பான விழிப்புணர்வு பேனர்கள் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !