உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கணவர் இறந்த துக்கம்: மனைவி தற்கொலை

கணவர் இறந்த துக்கம்: மனைவி தற்கொலை

சேத்துப்பட்டு, ஷெனாய் நகர், கந்தன் தெருவைச் சேர்ந்தவர் கவுதம், 29; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி மீனாட்சி, 28. தம்பதிக்கு, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.குடும்ப பிரச்னையால் கடந்த 13ம் தேதி இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கவுதம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், மன உளைச்சலில் இருந்த மீனாட்சி, கடந்த 16ம் தேதி வீட்டின் கழிப்பறையில், துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் நள்ளிரவு மீனாட்சி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி