மேலும் செய்திகள்
புதுவண்ணையில் மீனவர் வெட்டி கொலை
16-Jan-2025
சென்னை, ஐஸ்ஹவுஸ், நடேசன் சாலையைச் சேர்ந்தவர் சத்யபிரியா, 41. இவருக்கு பிளஸ் 2 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சத்யபிரியா நேற்று முன்தினம் காலை, மகள்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர் வேலைக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து மூத்தமகள் இரவு வீட்டிற்கு வந்தபோது, தங்கை சுபசித்ரா சந்தேகத்திற்கு இடமான வகையில் சேலையில் கழுத்து இறுக்கி உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ஐஸ்ஹவுஸ் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாடும்போது தற்செயலாக உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Jan-2025