உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அஞ்சல் முகவர்களுக்கான நேர்காணல்

 அஞ்சல் முகவர்களுக்கான நேர்காணல்

சென்னை: பரங்கிமலை தலைமை அஞ்சலகம் சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின், நேரடி முகவர்களுக்கான நேர்காணல் வரும், 20ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து அஞ்சல்துறை வெளியிட்ட அறிக்கை: இதில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 50 வயதிற்குள் இருக்க வேண்டும். சுய தொழில், வேலையில் இளைஞர்கள், அங்கன்வாடி, மகிளா மண்டல பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம். மற்ற ஆயுள் காப்பீடு அலுவலகத்தில் முகவர்களாக உள்ளவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், 'டிபாசிட்டாக' 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை