மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலி
சூணாம்பேடு, பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி வயல்வெளியில் விழுந்து, அங்கு காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி பலியானார்.செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அடுத்த சின்னகளக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன், 49: கூலித்தொழிலாளி.இவர் வேலைக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் தன், 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில் வீடு திரும்பினார். சின்னகளக்காடி அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் விழுந்தது.இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற செல்லப்பன் தடுமாறி, அருகே உள்ள வயல்வெளியில் விழுந்தார். அங்கு, காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து, சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, நிலத்தின் உரிமையாளரான நாகமணி, மின்வேலி அமைக்க மின் இணைப்பு தந்து உதவிய நடராஜன், 60, ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.