உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி முருகன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா துவக்கம்

வடபழனி முருகன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா துவக்கம்

சென்னை,வடபழனி முருகன் கோவிலில், இந்தாண்டிற்கான பங்குனி உத்திர விழா நேற்று துவங்கியது. 11ம் தேதி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனை துவக்க விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர்.தினமும் காலை 7:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடக்கிறது. அர்ச்சனை ஒன்றுக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதம் வழங்கப்படும்.பங்குனி உத்திரமான வரும், 11ம் தேதி உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கலாசாபிஷேகத்துடன் பூஜைகள் பூர்த்தியாகின்றன. அன்று இரவு 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி விதி உலா நடக்கிறது.வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை, மூன்று நாட்கள் இரவு 7:00 மணிக்கு, தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது.முதல் நாள் தெப்பத்தில் வடபழனி முருகன் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ