மேலும் செய்திகள்
பெங்களூருவில் வாடகை வயிற்றை பிசைகிறது !
23-Jan-2025
ஆவடி, :கொடுங்கையூர், யூனியன் கார்பைட் காலனியைச் சேர்ந்தவர், சுந்தரவடிவேலு, 40. இவரது தந்தை மணி. இவருக்கு, மணலிபுதுநகர், வீச்சூர் கிராமத்தில், 2,400 சதுர அடி இடம் உள்ளது.இந்நிலையில், கொரோனாவால் கடந்த 2022ம் ஆண்டு மணி உயிரிழந்தார். இதனால், சுந்தரவடிவேல் காலி இடத்தை விற்பனை செய்ய, நில புரோக்கர்களிடம் வில்லங்கம் போட்டு பார்த்துள்ளார்.அப்போது, 2,400 சதுர அடி இடத்தை, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, கடந்த 2007ம் ஆண்டு, மணி பொது அதிகாரம் கொடுத்ததாகவும், அதை கிருஷ்ணமூர்த்தி, 800 சதுர அடியாக பிரித்து, மூன்று பேருக்கு விற்றதும் தெரிந்தது.சம்பந்தபட்ட சார் - பதிவாளர் அலுவலகத்தில், இடம் தொடர்பான ஆவணங்களை பெற்று பார்த்தபோது, மணியின் புகைப்படம் மற்றும் கையெழுத்துக்கு பதிலாக, வேறு ஒருவருடைய ஆவணங்கள் வைத்து ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரிந்தது. இடத்தின் தற்போதைய மதிப்பு, 25 லட்சம் ரூபாய்.இது குறித்து சுந்தரவடிவேல் அளித்த புகாரின்படி, ஆவடி காவல் ஆணையரகம், நில பிரச்னை தீர்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, புரசைவாக்கம், வடமலை தெருவில் பதுங்கி இருந்த கிருஷ்ணமூர்த்தி, 51, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
23-Jan-2025