மேலும் செய்திகள்
கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
26-Apr-2025
மடிப்பாக்கம்,மடிப்பாக்கம்-, பள்ளிக்கரணை கைவேலி அருகே அந்தமான் நிக்கோபார் பவனுக்கு சொந்தமான காலி இடத்தின் குட்டையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.மடிப்பாக்கம் போலீசார் மற்றும் வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், படகில் சென்று உடலை மீட்டனர். பின், உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபரின் பெயர் விபரம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Apr-2025