உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மழைநீர் வடிகால்வாயில் ஆண் சடலம் மீட்பு

 மழைநீர் வடிகால்வாயில் ஆண் சடலம் மீட்பு

பல்லாவரம்: பல்லாவரம், மலகானந்தபுரம் பகுதியில், சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில், நேற்று காலை, 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. அதைக் கண்ட அப்பகுதி மக்கள், பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்தவர், அதே பகுதியை சேர்ந்த அமாவாசை, 52, என்பது தெரிய வந்தது. இவர், போதையில் தவறி கால்வாயில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி