உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்றோர் கைது

வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்றோர் கைது

வடக்கு கடற்கரை: வடக்கு கடற்கரை, ஈவ்னிங் பஜாரில் மொபைல் போன் கடை நடத்தி வருபவர் சாகுல் ஹமீது, 63. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு கடையை பூட்டி, பைக்கில் பாரிமுனை கார்னர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, இரு பைக்கில் வந்த மர்ம நபர்கள், சாகுல் ஹமீதை வழிமறித்து, அவரிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர்.அப்போது சாகுல் ஹமீது கத்தவே, அங்கிருந்தோர் பைக்கில் வந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், மீஞ்சூரை சேர்ந்த ஜோதீஸ்வரன், 25, இளவரசன், 27, கே.கே.நகரைச் சேர்ந்த டேவிட், 32, என தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ