உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு சிறை

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் சாலையோரம் துாங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு, 2023ல், சாகுல் அமீது என்ற காசிம் என்பவர், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். சிறுமியின் தாய் சிந்தாதிரிப் பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, போலீசார் விசாரணை நடத்தி, சாகுல் அமீது மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாகுல் அமீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 75,000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ