மேலும் செய்திகள்
ஆக்கிரமிக்கும் டூ - வீலர்கள் ஆவடி சந்தையில் அவதி
03-Jan-2025
ஆவடி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில், செங்குன்றம், ஈஸ்வர் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 55, அளித்த புகார்:வடபழனியில் உள்ள 'நாயுடு ஹாலில்' என்னுடன் மாங்காடு, காமாட்சி நகரைச் சேர்ந்த லட்சுமி, 39, என்பவர் பணி புரிந்தார்.லட்சுமி, அவரது கணவர் கணேஷ், 44, இருவரும் சேர்ந்து, தீபாவளி சீட்டு பிடிப்பதாகவும், மாதம் 1,000 ரூபாய் கட்டினால், 12 மாதங்கள் கழித்து, 15,000 ரூபாய் கிடைக்கும் என ஆசை காட்டினர். அதை நம்பி, என் உறவினர்கள், 115 பேரை சேர்த்தேன். ௧௨ மாதங்களில், 13.80 லட்சம் கட்டினேன்.தீபாவளி முடிந்து பல மாதங்களாகியும் கட்டிய பணத்தை தராமல், லட்சுமியும், அவரது கணவர் கணேஷும் ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த, ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி, தலைமறைவாக இருந்த லட்சுமியின் கணவர் கணேஷை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
03-Jan-2025