வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்ப புரியுது கோவில் நிலம் எப்படி காணாம போச்சு என்று
சென்னை முழுவதும் கிராம நத்தத்தை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, எந்த கட்டணமும் இல்லாமல், 3,338 சதுர அடி வரை, இலவச வீட்டு மனை பட்டா வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதை கவனத்தில் வைத்து, அரசு தாராளம் காட்டுகிறது. அடுத்த கட்டமாக, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், இந்த பாணியில் பட்டா வழங்க, வருவாய் துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள அயனாவரம், கிண்டி, கொளத்துார், அமைந்தகரை, மாம்பலம், பெரம்பூர், வேளச்சேரி ஆகிய ஏழு தாலுகாக்களில், 1978 முதல் 1999ம் ஆண்டு வரை, நகர நிலவரி திட்டத்தின்கீழ், மொத்த இடங்களையும் அளந்து பட்டா வழங்கப்பட்டது.தனியார் பட்டா பெற்ற நிலையில், அரசு இடமான நந்தம் வகைப்பாட்டில் வசித்த, 15,000க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இவர்களின் கோரிக்கையால், 2012ம் ஆண்டு, கையால் எழுதப்பட்ட பட்டா வழங்கப்பட்டது. இருந்தும், பத்திரப்பதிவு செய்ய முடியாததுடன், அனுமதி பெற்று கட்டடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், நந்தம் வகைப்பாடு இடத்தில் வசிப்போருக்கு, ஆன்லைன் பட்டா வழங்க அரசு முடிவு செய்தது. இந்த வகையில், விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சி எல்லையில் உள்ள ஏழு தாலுகாக்களுக்கு, ஆன்லைன் பட்டா வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியுடன், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல பகுதிகள் இணைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது.விரிவாக்கத்திற்கு பிந்தைய எல்லையான ஆலந்துார், அம்பத்துார், திருவொற்றியூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லுார் தாலுகாக்களில், நகர நிலவரி திட்ட பணிகள் முடிந்த கிராமங்களுக்கு, ஆன்லைன் பட்டா வழங்கப்பட உள்ளது. இந்த வகையில், சென்னை மாவட்டத்தில், 30,000க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதற்காக, தனி தாசில்தார்கள் நியமித்து பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: நகர நிலவரி திட்ட பணிகள் முடிந்த 46 கிராமங்களில், நந்தம் வகைப்பாட்டில் வசிப்போருக்கு ஆன்லைன் பட்டா வழங்கப்படும். இதற்காக, கையால் எழுதி தரப்பட்ட பட்டா வைத்திருப்போர் வீடுகளுக்கு சென்று, இடத்தை அளந்து, அவர்களின் முழுமையான விபரம் பெற்று, ஆவணங்கள் சரி பார்த்து, நோட்டீஸ் வழங்கப்படும். நோட்டீஸ் பெற்ற சில நாட்களுக்குள், நகர நிலவரி திட்ட தாசில்தார் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். முழு இடம் அல்லது பிரித்து விற்பனை செய்தார்களா; வணிக கட்டடம் கட்டி உள்ளனரா என, விசாரணை நடக்கும். ஆவணங்கள் சரியாக இருந்தால், 3,228 சதுர அடி வரையிலான நிலத்திற்கு ஆன்லைன் பட்டா வழங்கப்படும். மீதமுள்ள கிராமங்களில், நந்தம் இடத்தில் வசிப்போருக்கு, நகர நிலவரி திட்ட பணிகள் முடிந்த பின் பட்டா வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னை மாநகராட்சியில், நந்தம் நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதை தொடர்ந்து, சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், இதே பாணியில் வீட்டு மனை பட்டா வழங்க, அரசு ஆலோசித்து வருகிறது என, வருவாய் துறை அதிகாரிகள் கூறினர்.
கிராம நந்தம் இடத்தில் வசிப்போருக்கு, அதிகபட்சம் 3,228 சதுர அடிவரையிலான நிலத்திற்கு பட்டா வழங்கப்படும். இதில், 2,152 சதுர அடி இடம் வரை கோட்டாட்சியரும், அதற்கு மேல் மாவட்ட வருவாய் அதிகாரியும் பட்டா வழங்குவர். அதில், வீடு இருக்க வேண்டும். முழு வணிகம் அல்லது பகுதி வணிகமாக இருந்தால் பட்டா கிடைக்காது. அதே போல், ஒரு நபர், 3,228 சதுர அடிக்கு மேல் வைத்திருந்தால், அந்த இடத்திற்கு பட்டா கிடைக்காது. அது, அரசு நிலமாக இருக்கும்.
சென்னையில், 17 தாலுகா அலுவலகங்களின் கீழ், 241 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில், நிலவரி திட்ட பணிகள் முடிந்த, 12 தாலுகாக்களில் உள்ள, 46 வருவாய் கிராமங்களில் மட்டுமே, தற்போது கிராம நத்தம் நிலத்திற்கு பட்டா வழங்கப்பட உள்ளது. தாலுகா கிராமம் அயனாவரம் கொன்னுார் கிண்டி கோட்டூர் கொளத்துார் கொளத்துார், சிறுவல்லுார், பெரவள்ளூர் அமைந்தகரை அமைந்தகரை, பெரியகுட்டை, வில்லிவாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம், செஞ்சேரி மாம்பலம் நெசப்பாக்கம், கோடம்பாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சாலிகிராமம் பெரம்பூர் கொடுங்கையூர், சேலவாயல், எருக்கஞ்சேரி, ஜமாலியா, செம்பியம் வேளச்சேரி வேளச்சேரி, களிக்குன்றம், தரமணி, திருவான்மியூர், பள்ளிப்பட்டு, ஊரூர், கானகம் திருவொற்றியூர் எர்ணாவூர், சாத்தங்காடு மாதவரம் மாதவரம் அம்பத்துார் ஒரகடம், மேனாம்பேடு, பட்ரவாக்கம், அம்பத்துார், அத்திப்பட்டு, மன்னுார்பேட், கொரட்டூர், காக்காபாலம், முகப்பேர், பாடி ஆலந்துார் ஆலந்துார், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லுார் சோழிங்கநல்லுார் செம்மஞ்சேரி- நமது நிருபர் -
இப்ப புரியுது கோவில் நிலம் எப்படி காணாம போச்சு என்று