செய்திகள் சிலவரிகளில்
சென்னை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் இயற்கை பொருட்களின், விற்பனைச் சந்தை இன்றும், நாளையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள, அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடக்க உள்ளது. சந்தையில், திணை வகைகள், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரை உள்ளிட்ட இயற்கைப் பொருட்கள், விற்பனை செய்யப்பட உள்ளன.