மேலும் செய்திகள்
மும்பையில் கனமழை விமான சேவை பாதிப்பு
20-Aug-2025
சென்னை:'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானங்கள், தாமதமாக இயக்கப்பட்டதால் பயணியர் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12:35 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டிய 'ஏர் இந்தியா' விமானம், ஒன்றரை மணி நேரம் தாமதமாக அதிகாலை 2:05 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12:55 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதிகாலை 2:25 மணிக்கு புறப்பட்டது. மேலும், நேற்று முன்தினம் இரவு 10:10 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண் டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக, நள்ளிரவு 12:40 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காலை 5:40 மணிக்கு புறப்படும் விமானம், மூன்று மணி நேரம் தாமதமாக, காலை 8:40 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணியர் அவதியடைந்தனர். விமானங்களின் தாமதம் குறித்து, பயணியருக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பயணியர் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
20-Aug-2025