உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இட நெருக்கடியில் காவல் நிலையங்கள் புதிதாக கட்ட போலீசார் எதிர்பார்ப்பு

இட நெருக்கடியில் காவல் நிலையங்கள் புதிதாக கட்ட போலீசார் எதிர்பார்ப்பு

பூந்தமல்லி: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, போரூர் மகளிர் காவல் நிலையம் மற்றும் மவுலிவாக்கம் காவல் நிலையங்கள் சொந்த கட்டடம் இல்லாததால், இட நெருக்கடியில் செயல்படுகிறது. புதிதாக காவல் நிலையங்கள் கட்ட வேண்டும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி காவல் நிலையம், பூந்தமல்லி மேல்மா நகரில், கூட்டுறவு துறைக்குச் சொந்தமான கட்டடத்தில், 1992 முதல் இயங்குகிறது. இந்த கட்டடம், கூரை பலவீனமாக உள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் கசிகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kttlo3cj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் 2006 முதல், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், இடநெருக்கடியில் செயல்படுகிறது. மேலும், மாங்காடு காவல் நிலைய கட்டடத்தின் கீழ்புறம் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில், தடுப்புச்சுவராக தகர ஷீட்கள் அமைத்து, போரூர் எஸ்.ஆர்.எம்.சி., சரகத்தின் மகளிர் காவல் நிலையம் இடநெருக்கடியில் இயங்குகிறது. அதேபோல், மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, மவுலிவாக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட புதிய காவல் நிலையம், பழைய அங்கன்வாடி கட்டடத்தில் இட நெருக்கடியில் உள்ளது. மேற்கண்ட காவல் நிலையங்களில் போலீசார் ஓய்வு அறை, ஆவணங்கள் காப்பகம், கைதிகள் விசாரணை அறை, வழக்கு விசாரணைக்கு வருவோர் அமரும் இடம், வழக்கில் சிக்கிய வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால், ஏற்கனவே பணிச்சுமையில் உள்ள போலீசார், இடநெருக்கடியால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் மேற்கண்ட காவல் நிலையங்களுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி