தீபாவளிக்கு கார், பைக், ஏசி சலுகை அறிவித்தது பூர்விகா
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகளை, பூர்விகா நிறுவனம் அறிவித்துள்ளது. பூர்விகா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூர்விகா நிறுவனத்தில் மொபைல் போன், சமையல் உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பெருட்களை, 5,000 ரூபாய்க்கு மேல் வாங்குவோர், 'பீட் பேக் கன்டெஸ்டிங்' எனப்படும் கருத்து தெரிவிக்கும் போட்டியில் பங்கேற்கலாம். இதில், பிரமாண்ட பரிசுகள் காத்திருக்கின்றன. ஒருவருக்கு டாடா நெக்ஸான் கார், மூன்று பேருக்கு பி.எம்.டபிள்யூ., பைக், மூன்று பேருக்கு ராயல் என்பீல்ட் பைக், 30 பேருக்கு, 43 இன்ச் ஸ்மார்ட் 'டிவி', 30 பேருக்கு ப்ரிஜ், 30 பேருக்கு வாஷிங் மிஷின், 12 பேருக்கு ஒரு டன் 'ஏசி' 30 பேருக்கு லேப்டாப், 230 பேருக்கு ஸ்மார்ட் மொபைல் போன், 60 பேருக்கு ஏர் கூலர், 60 பேருக்கு சவுண்ட் பார், 1,000 பேருக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள 'வவுச்சர்' என, பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வாங்கும் மொபைல் போன்களுக்கு, 12,000 ரூபாய் 'எக்ஸ்சேஞ்ச்' போனஸ் உண்டு. எச்.டி.,எப்.சி., மற்றும் எஸ்.பி.ஐ., வங்கி அட்டைகளுக்கு, 13,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். வெறும் ஒரு ரூபாய் செலுத்தி, மொபைல் போன்களை தவணை முறையில் வாங்க முடியும். கூடுதல் விபரங்கள் மற்றும் பொருட்கள் வாங்க, அருகில் உள்ள பூர்விகா ஷோரூமை அணுகவும். இவ்வாறு, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.