குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சீரமைப்பு
சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் சாலை மோசமாகி ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. இவற்றில் கார் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி சிக்கி வந்தன. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, பள்ளங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டி தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது.