உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் ஆர்.எம்.கே., - லயோலா

மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் ஆர்.எம்.கே., - லயோலா

சென்னை, மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் போட்டியில், ஆர்.எம்.கே., - லயோலா 'ஐகாம்' அணிகள், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி சார்பில், மஞ்சுளா முனிரத்தினரம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள கல்லுாரி மைதானத்தில் நடக்கின்றன.இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா, அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே., - ஆர்.எம்.டி., - சத்தியபாமா, சவீதா, வி.ஐ.டி., மற்றும் லயோலா உள்ளிட்ட 19 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று காலை நடந்த முதல் காலிறுதி போட்டியில், ஆர்.எம்.கே., கல்லுாரியும் வேலம்மாள் கல்லுாரியும் மோதின. 'டாஸ்' வென்ற ஆர்.எம்.கே., அணி முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்தது.அடுத்து பேட் செய்த வேலம்மாள் அணி, 15.1 ஓவர்களில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி அணி, 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.மற்றொரு காலிறுதியில், டாஸ் வென்ற லயோலா 'ஐகாம்' அணி, 18.4 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிதான இலக்கை நோக்கி, அடுத்து களமிறங்கிய சென்னை வி.ஐ.டி., அணி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 84 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தது. இதனால், 32 ரன்கள் வித்தியாசத்தில் லயோலா ஐகாம் அணி, த்ரில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை