உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் போலீசிடம் ரகளை செய்த ரவுடி கைது

பெண் போலீசிடம் ரகளை செய்த ரவுடி கைது

எம்.கே.பி.நகர், பெண் போக்குவரத்து ஆய்வாளரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கலை கல்லுாரி சிக்னல் அருகில், வியாசர்பாடி போக்குவரத்து பெண் ஆய்வாளர் நித்தியா உமா தலைமையிலான போலீசார், கடந்த 31ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத கே.டி.எம்., பைக்கில் வந்த மூவரை மடக்கி சோதனை செய்தனர். மூவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முற்பட்ட போது, போதை ஆசாமிகள் ரகளை செய்து, பைக்கை அங்கேயே விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் நித்யா உமா, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, செங்குன்றம், நரவாரிக்குப்பத்தை சேர்ந்த ரவுடி டில்லிபாபு, 24 என்பவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி