உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற ரவுடி கைது

போதை மாத்திரை விற்ற ரவுடி கைது

வியாசர்பாடி, போதை மாத்திரைகள் விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, கல்யாணபுரம் அருகே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போதை மாத்திரைகளை மறைத்து வைத்து விற்பனை செய்த, 'பி' கல்யாணபுரத்தை சேர்ந்த, ரவுடி அஜித்குமார், 30 என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த, 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !