உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை இடம் மாற்றம்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை இடம் மாற்றம்

சென்னை,ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் இடம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை வளாகத்தில், 'குளிர்சாதன வசதி' சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யும் உடல்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுகுறித்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: 'ஏசி' சீரமைப்பு காரணமாக தற்காலிமாக, பிரேத பரிசோதனை இடம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தினசரி, ஐந்து உடல்கள் வரும். அந்த உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவ குழுவினர், அங்கு பிரேத பரிசோதனை செய்வர். வழக்கமான உடல்கள் பதிவு நடைமுறையில் மாற்றம் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை