மணல் திருட்டு தடுக்க சீமான் வலியுறுத்தல்
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக மாற்றப்படுவதற்கு தேவையான சவ்வூடு மணல், பட்டாபிராமபுரம் ஏரியில் இருந்து எடுக்கப்படுகிறது.இங்கு, 5 அடி ஆழம் மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 அடி ஆழத்திற்கு அதிகமாக, மணல் வெட்டி கொள்ளை அடிக்கப்படுகிறது. கொள்ளை அடிக்கப்படும் மணல் கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது.அதற்கு எதிராக போராடுகிற சமூக ஆர்வலர்கள் மீதும், நாம் தமிழர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.இதில் இருந்து, இந்த அரசு யாருக்கானது என்பது விளங்கும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.