உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 27, 28ல் சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 27, 28ல் சிறப்பு முகாம்

சென்னை: சென்னை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு, சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: வரைவு வாக்காளர் பட்டியல், 19ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறுவது, வரும் ஜன., 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தகுதியான குடிமக்கள் விண்ணப்பிக்க வசதியாக, 4,079 ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 27, 28, ஜன., 3, 4 ஆகிய தேதிகளில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில், 18 வயது நிரம்பிய தகுதியுடையோர், படிவம் - 6 சமர்ப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டபை தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க படிவம் - 7 வழங்கலாம். அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையோர், படிவம் - 8 பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ