உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுரை - ராஜஸ்தானுக்கு எழும்பூர் வழி சிறப்பு ரயில்

மதுரை - ராஜஸ்தானுக்கு எழும்பூர் வழி சிறப்பு ரயில்

சென்னை, மதுரையில் இருந்து எழும்பூர் வழியாக ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: ★ மதுரையில் இருந்து வரும் 28ம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பகல் 12:30 மணிக்கு பகத் கீ கோதிக்கு செல்லும்★ பகத் கீ கோதியில் இருந்து வரும் மே 1ம் தேதி காலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 8:30 மணிக்கு மதுரைக்கு செல்லும். திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளன★ சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 7:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பகல் 12:30 மணிக்கு பகத் கீ கோதிக்கு செல்லும்★ பகத் கீ கோதியில் இருந்து வரும் 30ம் தேதி காலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் இரவு 11:15 மணிக்கு சென்ட்ரல் வரும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை