உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தமிழக பெண்கள் அணி சாம்பியன்

டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தமிழக பெண்கள் அணி சாம்பியன்

திருவொற்றியூர்:அகில இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில், பெ ண்கள் பிரிவில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அகில இந்திய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள், ஆக., 1, 2, 3 ஆகிய தேதிகளில், திருவொ ற்றியூர், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்தன. தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா உட்பட பல மாநிலங்களில் இருந்து, ஆண்கள் பிரிவில் 26 அணிகள்; பெண்களில் 16 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டிகள், நேற்று மதி யம் நடந்தன. ஆண்கள் அணியில், மஹாராஷ்டிரா - தமிழக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், மஹாராஷ்டிர அணி முதலில் விளையாடி 87 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய தமிழக அணி 72 ரன்கள் மட்டுமே எடுத்து, அதிர்ச்சி தோல்வி அடைந்தது. வெற்றி பெற்ற மஹாராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம், கேரளா அணிகள், முறையே இரண்டு, மூன்றாவது இடங்களை பிடித்தன. பெ ண்கள் பிரிவில், தமிழகம் - கோவா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய தமிழக அணி 88 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கிய கோவா 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், தமிழக பெண்கள் அணி வெற்றி வாகை சூடியது. கோவா இரண்டாம் இடமும், ஆந்திரா மூன்றாவது இடமும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை