மேலும் செய்திகள்
கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை
02-Sep-2024
சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தன் தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாயுடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்த 38 வயதான நபர், கடந்தாண்டு நவ., 1ல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழக்கை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை சிறுமிக்கு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு இழப்பீடாக 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.
02-Sep-2024