உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருக்கோவில் தொழிலாளர் சங்க மாநாடு

திருக்கோவில் தொழிலாளர் சங்க மாநாடு

சென்னை; அரசு ஊழியர்களுக்கு இணையாக கோவில் பணியாளர்களுக்கும், தமிழக அரசு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநில சிறப்பு மாநாட்டை, பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை நடத்துகிறது. அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைக்கிறார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ