வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இன்றைக்கு சென்னை உட்பட தமிழகம் முழு சிறு நகரங்களில் கூட ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது. பொதுமக்கள் நடக்கக்கூட இடமில்லாமல் சாலையின் இருபுறங்களையும் அரசியல்வாதிகளின் பினாமிகள் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து நடு ரோட்டில்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் எந்த தப்பும் செய்யாமல் உயிரிழக்கும் அப்பாவிகள் அதிகம்.குறிப்பாக கூடுவாஞ்சேரி பகுதியில் மக்கள் நடந்து செல்வதற்கு இடமில்லை. இருபுறமும் உள்ள நான்கு வழி சாலையில் ஒரு வழி முழுதும் கடைகளின் முன்புறங்களை இழுத்தும், மற்றவர்களும் ஆக்கிரமித்துள்ளன. இரண்டாவது வழி சாலையை கார்கள் , ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி ஆக்கிரமித்துள்ளன. மூன்றாவது வழி சாலையில்தான் பொதுமக்கள் நடக்க முடியும். வேறு வழியில்லை. இதை எங்கே கொண்டுபோய் சொல்வது? அரசியல்வாதிகள் சுகமாக வாழ பொதுமக்கள் ரோட்டில் அடிபட்டு சாக வேண்டுமா? ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு இதுதான் தண்டனை.
பாண்டி பஜார் வந்து பாருங்கள். நடைபாதையில் இரு வீலர்கள் அவர்கள் இஷ்டப்படி ஓட்டுகிறார்கள். நடக்கவிடாமல் திடீர் திடீர் என குறுக்கே வருகிறார்கள். வயதான நடைவாசிகள் படும் சிரமம் மிக அதிகம். இத்தனைக்கும், கூப்பிடு தூரத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது.
இதுதான் டபுள் டமாக்கா இந்த மாதிரி ஆக்கிரமருப்புகளையெல்லாம் அகற்ருவோம்ன்னு ஒரு அறிக்கை வுட்டுடவேண்டியது அதுவும் இப்போ தீவாளி நேரம் இல்லையா கூட்டி கசிச்சி பாருங்க கணக்கு சரியா இருக்கும். இந்த மாதிரி அறிவிப்பு குடுத்தபின்தான் மேலும் ஆக்கிரமுப்பு வரும் இப்ப பாருங்க வரிசையா நிப்பாங்க
சாலிகிராமம் ஆற்காட் சாலை என்பது அடி சிக்னல் இருந்து வடபழனி பேருந்து நிலையம் வரை இடது பக்க நடைபாதை பெரும்பாலான இடங்களில் கிடையாது ,சாலையில் தான் சிறுவர்கள் மகளிர் மூத்த குடி மக்கள் உயிர் பயத்துடன் நடக்க வேண்டிய நிலை .சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்களில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி வேறு பயமுறுத்தும், ,விதிகளை மீறி எதிரே வரும் இரு சக்கர வாகனங்கள் மேலும் பயமுறுத்தும்
சட்ட ரீதியான நடவடிக்கை. ரைட்டு. சட்ட மேதாவிகள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்திரவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கு செந்தில் பாலாஜி கேஸ் விசாரிக்கவே நேரமில்லை.
வாங்க சார் வாங்க இங்கே வெங்கட்நாராயணா ரோட்டுக்கு வாங்க நடைபாதை எங்கே இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சி குடுங்க பாக்கலாம். ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் பூக்கடை. ஒன்னு பாத்தாகி இப்போ நூறு கடையாயிடுச்சி. ஏதாவது விசேஷ நாட்கள்ல பக்தர்களை வரிசையில் நிக்க வைக்க ரோடுலேதான் கட்டை கட்டறாங்க அது போதாதுன்னு கார்லே போறவங்க கோயிலுக்கு எதிரேதான் வந்து இரங்குவாங்க அதனால நடு ரோட்டுல வரிசாயா நிக்குது பின்னாடி வர மாநரக பேருந்துகளோட ஆரன் சத்தம் காதை துளைக்குது இதெயெல்லாம் சரி பண்ண முடியுமா பாருங்க. அதே மாதிரி ஞாயிற்றுகிழமை அன்னிக்கு சைதை பாலத்துலே ரெண்டு பக்கமும் நிக்கற கார்கலை அப்புறப்படுத்த முடியுமா அது என்ன கார் பார்க்கிங்கா? இதெல்லாம் சும்மா பேப்பர்ல வேணா போடலாம் நடைமுறைக்கு ஒத்து வராது.
அனுமதிக்கப்பட்ட சாலைகள் ஒரு குறிப்பிட்ட அளவு அகலம் உள்ள சாலைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அந்தந்த சாலை மற்றும் நடைபாதை அகலம் சாலை பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும். கடைகள் நடைபாதையில் போடக்கூடாது. தள்ளு வண்டியானாலும் ஒரே இடத்தில நிரந்தரமாக நிறுத்தப்பட கூடாது. சாலை பணிகள் நடக்கும்போது, கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளை கவுன்சிலர், போலீஸ், போக்குவரத்து மற்றும் வருவாய்துறை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
குரோம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சட்ட விரோத வாகன நிறுத்தங்கள் நடைபாதை ஆக்கிரமிப்புகள் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத தாம்பரம் மாநகராட்சி மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறை காரணங்கள் பலவிதமாக சொல்லப்படுகின்றன 1 ஒரு சில உள்ளூர் அரசியல்வாதிகள் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களை கண்டுகொள்ள கூடாது என்று மறைமுகமாக போக்குவரத்து காவல் துறைக்கும் தாம்பரம் மாநகராட்சிக்கும் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படும் கருத்தாக உள்ளது 2 போக்குவரத்து காவல் துறைக்கும் தாம்பரம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்களுக்கும் இடைத்தரகர்கள் மூலமாக கரன்சிகள் கைமாறும் காரணத்தால் சட்ட விரோத வாகன நிறுத்தங்களைகண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்றன
ஓ, மாநகராட்சி அதிகாரிகளின் தீபாவளி வசூல் வேட்டை ஆரம்பமா? எஞ்ஜாய்.