உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சிறுவனை வெட்டிய மூவர் கைது

 சிறுவனை வெட்டிய மூவர் கைது

ஓட்டேரி: ஓட்டேரி, மங்களபுரம் சேமாத்தம்மன் காலனியைச் சேர்ந்தவர் பரஞ்ஜோதி, 17; பிளஸ் 2 மாணவர். இவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், நண்பர்களுடன் சேமாத்தம்மன் கோவில் அருகே, மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூவர் முன்விரோதம் காரணமாக கத்தியால், சிறுவன் பரஞ்ஜோதியின் காலில் வெட்டி மொபைல்போனை பறித்து சென்றனர். காயமடைந்த பரஞ்ஜோதி, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஓட்டேரி போலீசார் விசாரித்து, ஓட்டேரி பழைய வாழைமா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் மற்றும் 15 வயது சிறுவன் ஒருவர் என மூவரை கைது செய்தனர். பின், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை